அபிஷேகம் நிறைந்த ஆராதனை வேண்டுமைய்யா
உந்தன் அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா
சுட்டெரிக்கும் ஆவியை ஊற்றமைய்யா
என் சுயங்கள் மரிக்க வேண்டுமைய்யா
சுத்த ஆவியால் என்னை நிரப்புமைய்யா
பரிசுத்தமாய் நான் வாழனுமைய்யா
அனலுமின்றி குளிருமின்றி வேண்டாம்மையா
உந்தன் அனலோடு ஆராதனை செய்யனுமைய்யா
ஆர்ப்பரித்து உம்மை நான் ஆராதிக்க
ஆனந்த தைலத்தை ஊற்றுமைய்யா
அபிஷேகமே வாஞ்சையாய் மாறனுமைய்யா
அபிஷேக நாதரே வாருமைய்யா
உன்னதத்தின் ஆவியை ஊற்றுமைய்யா
உமக்காய் நான் வாழனுமைய்யா
Abishegam niraintha aarathanai vendumaiyya
unthan abishegathal ennai nirappumaiyya